Tuesday, October 31, 2006

ஆயுதக் குழுவிரால் 11 சிறுவர்கள் கடத்தப்பட்டுள்ளனர்.

சித்தாண்டியில் வெள்ளை வானில் வந்த ஆயுதக் குழுவிரால் 11 சிறுவர்கள் கடத்தப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு சித்தாண்டி பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வெள்ளை வானொன்றில் வந்த ஆயுதக் குழு வினரால் 11 சிறுவர்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். சித்தாண்டி முருகன் கோவிலில் கந்தசஷ்டி பூஜைக்குச் சென்றுவிட்டு வீடுகளுக்குத் திரும்பிக்கொண்டிருந்த சிறுவர்களே கடத்தப்பட்டுள்ளனர். வானொன்றில் வந்த ஆயுத பாணிகளே இந்தச் சிறுவர்களை விரட்டிப் பிடித்து வானில் தூக்கிப் போட்டுக்கொண்டு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆயுதக் குழுவினர் துரத்திச் சென்ற போது வேறு சில சிறுவர்கள் தப்பியோடிவிட்டனர். ஆயுதக் குழுவினரால் சிறுவர்கள் கடத்தப்பட்டபோது இவர்களில் சிலரது பெற்றோரும் வந்துள்ளனர். தங்கள் பிள்ளைகள் கடத்தப்படுவதை தடுக்க முயன்றபோதும் அது சாத்தியப்படவில்லை. அச்சம் காரணமாக இது குறித்து பெற்றோர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யவில்லை.