Saturday, September 30, 2006

வவுனியாவில் இருவேறு தாக்குதலில் நான்கு படைத் தரப்பினர் பலி! வவுனியாவில் இடம்பெற்ற இரு வேறு தாக்குதலில் சிறீலங்காப் படைத் தரப்பில் நால்வர் கொல்லப் பட்டுள்ளனர். இன்று காலை 8.35 மணியளவில் வவுனியா மன்னார் வீதி தாழப்பைக்குளப் பகுதியில் அமைந்துள்ள சிறீலங்கா படையினரின் கண்காணிப்பு நிலையம் மீது நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் மூன்று சிறீலங்காக் காவல்துறையினர் கொல்லப் பட்டுள்ளதோடு மேலும் நான்கு சிறீலங்காக் காவல்துறையினர் படுகாயங்களுக்குள்ளாகினர். இதேநேரம் நேற்றிரவு கோவில்குளத்தில் இடம்பெற்ற இனம் தெரியாதோரின் துப்பாக்கிச் சூட்டில் சிறீலங்கா படை அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டதோடு மேலும் இரு படையினர் காயங்களுக்கு உள்ளாகினர்.