யாழில் கப்பலில் செல்வதற்காக காத்திருந்த பயணிகள் ஏமாற்றம். யாழ்ப்பாணத்தில் இருந்து தென்பகுதிக்கான கப்பல் பயணத்திற்கென வந்தவர்கள் பல மணித்தியாலங்கள் காத்திருந்த போதிலும் இவர்கள் கப்பலில் செல்வதற்கு அனுமதிக்கப்படாமையைத் தொடர்ந்து காத்திருந்து விட்டு சென்றார்கள். இதே நேரம் யாழ் குடாநாட்டில் தற்போது தங்கியுள்ள வெளிமாவட்டங்களைச் சேர்ந்த அரச அலுவலர்கள் யாழ்ப்பாணம் செயலகத்தில் வைத்து கப்பலுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்கள். இவர்கள் இன்று யாழ் செயலகத்தில் இருந்து காங்கேசன்துறை துறை முகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட போதிலும் இவர்கள் எப்போது கப்பலில் திருமலைக்கு கொண்டு செல்லப்படுவார்கள் என்பதும் தெரியவில்லை.





