இருபாலையில் கலோ ரஸ்ட் நிறுவனப் பணியாளர் சுட்டுக்கொலை. இன்று காலை 7.15 மணியளவில் இருபாலைப் பகுதியில் இடம் பெற்றதுப்பாக்கிச் சூட்டில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார். கண்னி வெடி அகற்றும் நிறுவனமான கலோ ரஸ்ட் நிறுவனத்தில் கடமையாற்றும் இருபாலை வி.எச் வீதியைச் சேர்ந்தவரான இராசரெத்தினம் அன்பழகன் வயது 30 என்பவரே மோட்டார் சையிக்கிளில் வந்த இனம்தெரியாதவர்களினால் சுட்டு படுகொலை செய்யப்பட்டவராவார். இவர் காலையில் தனது வேலைக்குச் செல்லும் வேளையில் இவரை மோட்டார் சையிக்கிளில் பின்தொடர்ந்து வந்தவர்கள் வீட்டுக்கு அண்மையாக வைத்து சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கோப்பாய் பொலிசார் சடலத்தை யாழ்ப்பாணம் போதனா வையித்திய சாலையில் ஒப்படைத்துள்ளார்கள்.





