யாழ் செல்வோர் ஒரு மணிக்கு முன் சமூகம் தரவும் - வவுனியா மாவட்ட செயலகம் அறிவிப்பு வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு செல்லும் பயணிகள் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு முன்னர் வருகை தரவேண்டும் என வவுனியா மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது. இந்த பயணம் நாளையதினமே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதும் பாதுகாப்பு படைதரப்பு இன்று இந்த பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தமையை அடுத்தே இந்த அறிவித்தல் விடுக்கப்படுவதாக வவுனியா அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். இந்தநிலையில் கப்பலுக்குப் பதிவு செய்தவர்கள் மற்றும் பதிவு செய்யாதவர்கள் என அனைவரும் இந்தப் பயணத்தில் இணைந்துகொள்ளலாம் என வவுனியா அரசாங்க அதிபர் கேட்டுள்ளார்.





