Friday, September 29, 2006

கிழக்கின் எதிர்காலத்தை அந்த மக்களே தீர்மானிப்பர்: மகிந்த ராஜபக்ச கிழக்கு மாகாண மக்களினது எதிர்காலத்தை அந்த மக்களேதான் தீர்மானிப்பர் என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிறிலங்காவுக்கு வருகை தந்துள்ள பிரித்தானிய குழுவினருடனான உரையாடலின் போது மகிந்த இதனைத் தெரிவித்துள்ளார்அக்குழுவினரிடம் மகிந்த ராஜபக்ச கூறியதாவது: நிறைவேற்று அதிகாரம், நீதித்துறை, சட்டத்துறை உள்ளிட்ட எதனாலும் கிழக்கு மக்களின் எதிர்காலத்தை மாற்ற முடியாது.அந்த மக்களேதான் தங்களது எதிர்காலத்தைத் தீர்மானிப்பர். இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் கூட கிழக்கு மக்கள் தங்களது எதிர்காலத்தைத் தீர்மானிக்க வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்லோரும் கற்பனையாக பிரபாகரன்தான் கிழக்கு மக்களின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பவர் என்று கருதுகின்றனர். ஆனால் கிழக்கு மக்களினது ஜனநாயக உரிமையை எவராலும் மறுக்க முடியாது என்று மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.