புலிகளின் சர்வதேச முகவராக கண்காணிப்புக்குழு உடன்படிக்கையை ரத்து செய்து வெளியேற்ற வேண்டும் ஜே.வி.பி.யின் பிரசார செயலாளரும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் செயலாளருமான விமல் வீரவன்சவிடுதலைப் புலிகளின் சர்வதேச முகவர் நிலையமாக கண்காணிப்புக்குழு செயற்படுகின்றது. போர் நிறுத்த உடன்படிக்கையை உடனடியாக ரத்துச்செய்து போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவை நாட்டைவிட்டு வெளியேற்றவேண்டும் என்றுஜே.வி.பி.யின் பிரசார செயலாளரும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் செயலாளருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். ஒஸ்லோ புலிகளை இந்த நாட்டிலிருந்து விரட்டியடித்தால் மட்டுமே வன்னிப் புலிகளை நேரடியாக தோற்கடிக்க முடியும். இனப்பிரச்சினை தீர்வுக்கு அதிகாரப் பகிர்வு குறித்து ஆராயத் தயார் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை எமக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது இவ்வாறு கூற ஜனாதிபதிக்கு எந்தவித அருகதையும் இல்லை என்றும் அவர் மேலும் கூறினார்.தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் நேற்று முற்பகல் கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே விமல் வீரவன்ச இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கூறியதாவதுஇலங்கையில் மனித உரிமை மீறல்கள் அதிகம் இடம் பெறுவதாகவும் அவை குறித்து விசாரிக்க ஐ.நா.வின் கண்காணிப்புக்குழு வரவேண்டும் என்றும் போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் புதிய தலைவர் ஜோன் சொல்பேர்க் தெரிவித்துள்ளார். இதனை நாங்கள் வண்மையாக கண்டிக்கின்றோம். இவ்வாறு சர்வதேசத்திற்கு யோசனை தெரிவிக்கும் உரிமை கண்காணிப்புக்குழு தலைவருக்கு கிடையாது. இவரின் கூற்றை அரசாங்கம் நிராகரித்துøள்ளமையை வரவேற்கின்றோம்.ஐ.நா.வின் அமைதிப்படையை இந்த நாட்டுக்குள் கொண்டு வர சர்வதேச மட்டத்தில் பாரிய சதித்திட்டம் ஒன்று அரங்கேற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாகவே கண்காணிப்புக்குழுவின் அறிக்கை அமைந்துள்ளது. இது குறித்து நாம் ஆரம்பித்திலிருந்தே எச்சரித்தவருகின்றோம்.எனவே கண்காணிக்குழுவை நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்கான நடவடிக்கையை அரசாங்கம் எடுக்கவேண்டும். நோர்வேயும் கண்காணிப்புக்குழுவும் எமது நாட்டுக்கு எதிரிகளாகவும் புலிகளுக்கு சார்பாகவும் செயற்பட்டு வருகின்றன. போர் நிறுத்த உடன்படிக்கை காகித மட்டத்தில் அமுலில் இருப்பதாலேயே கண்காணிப்புக்குழு இலங்கையில் இருக்கின்றது.இந்நிலையில் அரசாங்கம் உடனடியாக போர்நிறுத்த உடன் படிக்கையை இரத்துச் செய்யவேண்டும். அதன் பின்னர் கண்காணிப்புக்குழு தானாகவே வெளியேறி விடும். யுத்த நிறுத்தத்தை கண்காணிப்பதே கண்காணிப்புகுழுவின் பணியாகும். மாறாக இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சர்வதேசத்திற்கு யோசனை தெரிவிப்பது அவர்களின் பணியல்ல என்பதை ஞாபகமூட்டுகின் றோம்.அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பி.பி.சி. தமிழோசைக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் தான் இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் அதிகாரப்பகிர்வு குறித்து ஆராய தயார் என்றும் ஜே.வி.பி.யின் கோரிக்கைக்கு அமைய நோர்வையை நாட்டைவிட்டு வெளியேற்றவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இது எங்களுக்கு பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜனாதிபதி ஒற்றையாட்சி என்ற பதத்தையே மறந்து விட்டார் போலும். ஜே.வி.பி. யின் கோரிக்கைக்கு அமைய நோர்வையை வெளியேற்றவில்லை என்று கூறுவதற்கு ஜனாதிபதிக்கு எந்த அருகதையும் இல்லை. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷ ஜே.வி.பி. யுடன் செய்து கொண்ட உடன்படிக்கையில் நோர்வே குறித்து மீள் பரிசீலனை செயயப்படும் என்றும் உறுதியளித்துள்ளார். இந்நிலையில் தற்போதைய அவரின் கருத்துக்களில் மாற்றங்கள் தென்படுகின்றன.இனப்பிரச்சினை தீர்வு குறித்து ஆராய சர்வகட்சி ஆலோசனைக்குழுவும் விசேட நிபுணர்குழுவும் நியமிக்கப்பட்டுள்ளன. மேற்படி குழுக்களின் தீர்வு யோசனை அதிகாரப்பகிர்வு அல்லது சமஷ்டி அடிப்படையில் அமையுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவ்வாறான தீர்வுகள் முன்வைக்கப்படுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம். ஒற்றையாட்சி என்ற பதம் மறக்கடிக்கப்படக் கூடாது. ஐக்கிய இலங்கை என்ற பேச்சுக்கே இடமில்லை.சர்வதேச நாடுகள் தீர்வொன்றை முன்வைக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றன. ஆனால் அரசாங்கம் தீர்வை முன்வைத்தால் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க பிரபாகரன் தயாரா? என்று கேட்கின்றோம். இவ்விடயத்தில் சர்வதேச சமூகத்திற்கு தெரியுமா உத்தரவாதம் வழங்க முடியுமா?கடந்த காலங்களில் மாகாண சபை தீர்வை முன்வைத்த இந்தியா தனது பிரதமரை இழந்தது. அதனைவிட அதிகாரங்கள் கூடிய தீர்வு முறைமையை முன்வைத்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தனது கண்ணொறை இழந்தார்.எனவே முதலில் பயங்கரவாதம் தோற்கடிக்கப்படவேண்டும். வடகிழக்கில் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் அதன் பின்னர் பேச்சுவார்த்தை குறித்தும் பிரச்சினைக்கான தீர்வு குறித்தும் ஆராய முடியும். அரசசார்பற்ற நிறுவனங்கள் இலங்கை விவகாரத்தில் அத்துமீறிச் செயற்படுவதாக தெரிகிறது. கெப்பட்டிகொல்லா பகுதியில் பாடசாலைகளுக்கு பிளான் என்ற அரசார்பற்ற நிறுவனம் சமாதானத்தை வலியுறுத்திய புத்தகங்களை அச்சடித்து விநியோகிப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் எமது மாணவ சமுதாயம் தவறாக வழிநடத்தப்படுகிறது. எனவே இவ்விடயத்தில் கல்வி அமைச்சு தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்.அத்துடன் களுத்துறைப்பகுதியில் சில அரச சார்பற்ற நிறுவனங்கள் பாடசாலை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தலைமைத்துவப் பயிற்சிகளை வழங்குவதாக கூறப்படுகிறது. இதற்கு கல்வி அமைச்சின் அனுமதி பெறப்பட்டதா ? என வினவுகிறோம். எனவே எமது மேற்கண்ட விடயங்கள் குறித்து அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.





