இஸ்லாமியத் தீவிரவாதிகள் என்று பொதுவாக சொற் பிரயோகம் செய்யப்படுவதைத் தான் கடுமையாக எதிர்ப்பதாக பாகிஸ்தான் அதிபர் முஷாரப் தெரிவித்தார். இந்துக்களான விடுதலைப் புலிகளை இந்துத் தீவிரவாதிகள் என்று ஏன் அழைப்பதில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். நியூயோர்க்கில் அவரது சுயசரிதை நூலாக இன் த லைன் ஒப்பயர் வெளியீட்டுக்குப் பின் பொக்ஸ் தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியில் மேற்கண்டவாறு அவர் சொன்னார். அவர் மேலும் கூறியதாவது: அமெரிக்க அதிபர் எனது நண்பர். இஸ்லாமிய தீவிர வாதிகள் என்று பிரயோகம் செய்யவேண்டாம் என்று அவ ருக்கு ஆலோசனை கூறுவேன். அவர் இதிலுள்ள நியாயத் தைப் புரிந்துகொள்வார் என்ற திடமான நம்பிக்கை உள்ளது.பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் பாகிஸ்தானியர்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டுள்ளனர். தீவிரவாதத்துடன் இஸ்லாம் மதத்தை இணைத்து பேசப்படுவது மிகவும் வேதனை அளிக்கிறது. தீவிரவாத முத்திரை இஸ்லாம்மதத்தின்மீது திட்டமிட்டு குத்தப்படுகிறது.ஒசாமா பின்லேடன் மீதான அமெரிக்காவின் நடவடிக்கையை நான் தடுக்கும் பேச்சுக்கே இடமில்லை. பின்லேடனை தேடிக் கண்டுபிடிக்கும் பணியில் பாகிஸ்தான் மெத்தனமாக இருப்பதாகக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பின்லேடன் இறந்துவிட்டதாக செய்திகள் வந்துள்ளன. அதன் உண்மைத் தன்மை குறித்து ஆராய வேண்டும். இப்போது அது பற்றி ஏதும் கூற இயலாது. பயங்கரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தானும், அமெரிக்காவும் இணைந்து மிகச் சிறப்பாகச் செயற்படுகின்றன. அமெரிக்காவுடனான உறவு குறித்து பாகிஸ்தானியர்கள் மகிழ்ச்சியாக இல்லை என்பது உண்மைதான். இருதரப்பு நலனுக்கு இது தேவையானதே என்பதை அவர்கள் படிப்படி யாக உணருவர்.2001 செப்டெம்பர் 11இல் அமெரிக்காவில் உலக வர்த் தக மையக் கட்டடத்தின் மீது நடந்த தாக்குதலுக்குப் பிறகு, பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் ஒத்துழைக்காவிடில் பாகிஸ்தான் மீது குண்டு வீசுவோம்; கற்காலத்துக்கு திரும்பிச் செல்லத் தயாராக இருங்கள் என்றும் அமெரிக்கா மிரட்டியது. அது மிகவும் முரட்டுத்தனமான பேச்சு. அது எங்களை அவமானப்படுத்தும் வகையில் இருந்தது.ஆனால், நான் பொறுப்பான முறையில் நடந்துகொண்டேன். நாட்டு நலன் கருதியே ஒருவர் சிந்திக்கவும் செயற்படவும் வேண்டும். அவ்வாறே நான் செயற்பட்டேன் என்றார் முஷாரப்.





