மூதூர் அர்ஷா நகரில் சிறீலங்கா காவல்துறையினரால் ஆயுதங்கள் மீட்பு. மூதூர் அர்ஷா நகர் பிரதேசத்தில் காட்டு பகுதியில் இருந்து ஆயுத தொகை ஒன்றை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். கிளைமோர் ஒன்று, ஜீ.பி.எம்.ஜீ ரக துப்பாக்கிகள், 90 தோட்டக்கள், 40 மில்லி மீட்டர் ரக துப்பாக்கி அதற்கு பயன்படுத்தும் தோட்டக்கள் மற்றும் மேலும் 30 ரவைகள் என்வற்றை இன்று முற்பகல் 9.25 அளவில் காவல்துறையினர் மீட்டுள்ளனர். அதேவேளை யாழ்ப்பாணம் மட்டுவில் பிரதேசத்தில் 10 கிளைமோர் குண்களை பாதுகாப்பு தரப்பினர் கைப்பற்றியுள்ளனர். இந்த கிளைமோர் குண்டு ஒன்றின் எடை 7 கிலோ கிராம் என காவல்துறையினர் தெரிவித்தனர். அத்துடன் தொலைத் தொடர்பு கருவி, 43 உலர் உணவு பொதிகள் , 2 மைக்ரோ கைதுப்பாக்கிகள், இரண்டு மெகசின் , கைக்குண்டுகள் இரண்டு, மற்றும் செய்மதி தொலைத் தொடர்பு கரு உள்ளிட பொருட்களை கைப்பற்றியதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்தனர்.





