அம்பாறையில் எறிகணைத் தாக்குதல் பெண் படுகாயம் பாடசாலை சேதம். அம்பாறை மாவட்டத்தின் தாண்டியடி விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட மோட்டார் தாக்குதலினால் ஒரு பெண் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றும் தாண்டியடி விக்கிணேஸ்வர வித்தியாலயத்தின் பாடசாலை கட்டடம் சேதமடைந்தள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இன்று வியாழக்கிழமை காலை 7.00 மணியளவில் விசேட அதிரடிப்படையினரின் முகாமில் இருந்து மக்கள் குடியிருப்பு மீது மேற்கொண்ட தாக்குதல் காரணமாக பி.அம்புஜம் வயது 46 என்ற குடும்ப பெண் படுகாயமடைந்து திருக்கோயில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் முகானுடாக சென்ற பொதுமக்கள் படையினரால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.





