Thursday, September 28, 2006

இடம்பெயர் மக்களின் பிரச்சினையை கண்டறிய வெளிநாட்டு பிரதிநிதிகள் விஜயம். வடபுலத்தில் இருந்து இடம்பெயர்ந்த நிலையில் வாழும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கண்டறியும் வகையில் வெளிநாட்டு பிரதிநிதிகள் குழு ஒன்று புத்தளத்திற்கு நேற்று விஜயம் செய்துள்ளது. நேற்று மாலை கோல்டன் முகாமுக்கு விஜயம் செய்த இந்த குழுவினர் மக்களுடன் கலந்துரையாடி தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைகள்,நிவாரண பங்கீடுகள் குறித்து கேட்டறிந்து கொண்டுள்ளனர். அவுஸ்த்ரேலியா,பிரிட்டன், நைஜீரியா, கானா, குவைத் , அமெரிக்கா, போன்ற நாடுகளை சேர்ந்த பல்துறைசார்ந்த பிரதிநிதிகள் இந்த குழுவில் அடங்கியிருந்தாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.