மூதூர் பகுதி மக்கள் இடம்பெயர வேண்டிய அவசியமில்லை இராணுவ பேச்சாளர் மூதூர் பிரதேசத்தில் இராணுவத்தினர் உயர்மட்ட பாதுகாப்பை வழங்கி வருகின்றனர். எனவே, அப்பிரதேச மக்கள் இடம்பெயர வேண்டிய அவசியமில்லை என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். அச்சம் காரணமாக கடந்த சில தினங்களாக மூதூர் மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றமை தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது: மூதூர் பகுதியில் இருந்து மக்களை வெளியேறுமாறு புலிகள் மீண்டும் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டுள்ளனர். இருப்பினும் மூதூர் மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை. மூதூர் பகுதியில் பாதுகாப்பு படையினர் உயர்மட்ட பாதுகாப்பை வழங்கிவருகின்றனர். மூதூர் மக்கள் மீண்டும் இடம்பெயர்வதற்கான அவசியமில்லை.





