Monday, September 25, 2006

புல்மோட்டைக் கடற்பரபில் 5 மணி நேர கடற்சமர் 3 போராளிகள் வீரச்சாவு. புல்மோட்டைக் கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படையினருக்கும் விடுதலைப் புலிகளின் கடற்புலிகளுக்கும் இடையில் 5 மணி நேர கடும் சமர் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவில் கிழக்கே உள்ள புல்மோட்டை கடற்பரபில் சுற்றுக் காவலில் ஈடுபட்ட 25 கடற்புலிகளின் கடற்கள் நோக்கி சிறீலுங்கா கடற்படையினர் தாக்குதல் நடத்த முற்பட்ட வேளை இரு தரப்பினரிடையே பலத்த மோதல் இடம்பெற்றுள்ளது. 5 மணி நேரம் இடம்பெற்ற கடற்சமரில் மூன்று போராளிகள் வீரச்சாவடைந்துள்ளதாக விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இளந்திரையன் தெரிவித்துள்ளார். இம் மோதலில் சிறீலங்கா கடற்படையினரின் அதிவேக டோரா பீரங்கிப் படகு கடும் சேதற்திற்கு உள்ளாகியுள்ளது எனவும் இளந்திரையன் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை இம்மோதலில் விடுதலைப் புலிகளின் 9 படகுகளை தாம் மூழ்கடித்துள்ளதாகவும் 70 போராளிகளை கொன்றுள்ளதாகவும் சிறீலங்கா கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.