Saturday, September 30, 2006

பிரேசில் நாட்டில் 2 விமானங்கள் நடுவானில் மோதல்: பிரேசில் நாட்டின் கோல் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஜெட்விமானம் பயணிகளை ஏற்றிக்கொண்டு மனாஸ் நகரில் இருந்து புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் 140 பயணிகள் இருந்தனர். அந்த விமானம் பரா மாநிலத்தில் உள்ள சீரா டி.கேக்சிம்போ பகுதிக்கு மேலே சென்று கொண்டிருந்த போது வானிலை மிகவும் மோசமாக இருந்தது.அப்போது அந்த ஜெட் விமானம் இன்னொரு விமானம் மீது மோதியது. இதில் இன்னொரு விமானம் நிலை தடுமாறியது. அந்த விமானத்தை விமானி அருகில் உள்ள வயல் வெளியில் அவசரமாக தரை இறக்கி விட்டார். இதனால் அந்த விமானம் தப்பியது.140 பயணிகளுடன் சென்ற ஜெட் விமானம் என்ன ஆனது என்பது தெரியாமல் இருந்தது. அமேசான் காட்டுப்பகுதியில் அந்த விமானம் நொறுங்கிய விழுந்ததாப அல்லது வேறு எங்காவது தரை இறங்கியதா அதில் இருந்த 140 பயணிகள் கதி என்னப என்பது தெரியவில்லை. விமானத்துக்கும் தரை கட்டுப் பாட்டு நிலையத்துக்கும் இடையே தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது. இதை தொடர்ந்து அந்த விமானத்தை தேட விமானப்படை விமானங் கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.