Saturday, September 30, 2006

மட்டக்களப்பு பெரிய புல்லுமலைப் பகுதியில் மோதல் 11 போராளிகள் வீரச்சாவு. மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரியபுல்லுமலை பகுதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் விசேட அதிரடிப்படையினரால் விடுதலை புலிகளின் மீது வலிந்த தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இத்தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். படையினருடன் ஏற்பட்ட மோதலில் இதில் 11 போராளிகள் வீரச்சாவு அடைந்துள்ளனர். இதேநேரம் படையினரால் பொதுமக்களின் கடைகள் மூன்று எரியூட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு இன்று மாலை இலங்கை போர் நிறுத்த கண்காணிப்பு மட்டக்களப்பு குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டள்ளனர். விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் ஒரு கிலோமீற்றர் தூரம் ஊடுருவி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. போராளிகளின் வித்துடல்கள் நாளை சர்வதேச செஞ்சிலுவ சங்கத்தின் மூலம் பொறுப்பேற்கயிருப்பதாக மட்டு அரசியல்துறையினர் தெரிவித்துள்ளனர். தாக்குதல் தொடர்பில் விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இளந்திரையன் தெரிவிக்கையில்... இத்தாக்குதலில் விடுதலைப் புலிகள் தரப்பில் 11 போராளிகள் வீரச்சாவடைந் துள்ளதாக விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் ஐ.இளந்திரையன் தமிழ்நெட் இணையத்திற்கு தெரிவித்துள்ளார். தாக்குதல் நடத்தப்பட்ட இடத்திற்கு விடுதலைப் புலிகளின் மீட்புப் படையணிகள் சென்றபோதும் அதற்குள் 11 போராளிகளின் உடல்களையும் சிறீலங்கா அதிரடிப்படையினர் பவள் கவச வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளதாகவும் இளந்திரையன் தெரிவித்துள்ளார். இணைத் தலைமை நாடுகளின் வேண்டு கோளுக்கு இணங்க அனைத்து தாக்குதல்களையும் நிறுத்துவதாக விடுதலைப் புலிகள் அறிவித்து நிலையில் சிறிலங்காப் படையினர் தாக்குதல் நடத்தியிருந்தாகவும் சுட்டிக்காட்டிய இளந்திரையன் தாக்குதல் நடைபெற்ற இடத்தினை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் இன்று மாலை பார்வையிட்டுள்ளதாகவும் படையினரால் ஏவப்பட்ட எறிகணைகள் வீழ்ந்து வெடித்த இடங்களையும் பவள் கவச வாகனங்கள் வந்துபோன தடயங்களையும் கண்காணிப்புக் குழுவினர் பார்வையிட்டுச் சென்றதாகவும் இளந்திரையன் மேலும் கூறியுள்ளார்.