Tuesday, September 26, 2006

சட்டவிரோதமாக நாடு செல்ல முனைத்த 11 இலங்கையர் ஸ்பெயினில் கைது. சட்டவிரோதமாக மேற்கு நாடுகளுக்கு செல்ல முனைந்து ஸ்பெயினில் கைது செய்யப்பட்டவர்களில் இலங்கையைச் சேர்ந்த 11 பேரும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக, வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த கைது தொடர்பான விபரங்கள் தமக்கு ஸ்பெயின் அரசாங்கத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. சட்ட விரோதமாக கப்பல் ஒன்றில் பயணித்த 108 பேரை, ஸ்பெயின் காவல்துறையினர் கெனரி தீவில் வைத்து கைது செய்துள்ளனர்.