ரத்மலானை விமானத் தளத்திற்கு அருகில் முச்சக்கர ஓட்டுநர் துப்பாக்கியுடன் கைது. ரத்மலாணை விமானத் தளத்திற்கு அருகில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் சிறீலங்காப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ரத்மலானை விமான தளத்திற்கு அருகில் இருந்த முச்சக்கர வண்டி தரிப்பிடத்திலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இவரிடம் ரி-56 ரக துப்பாக்கி ஒன்றும் ரவைக்கூடு ஒன்றும் கைப்பற்றியதாக சிறீலங்காப் படையினர் தெரிவித்துள்ளனர்.கைது செய்யபட்டவர் பிரேமே என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் பிரதேச சபை உறுப்பினர் ஒருவருக்கு ரி-56 ரக துப்பாக்கியை விற்பனை செய்ய இருந்தாக விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக கல்கிஸ்சை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.





