சிறீலங்காவை ஐக்கிய நாடுகள்சபை கடுமையாக எச்சரித்துள்ளது. மூதூரில் பிரான்ஸ் உதவி நிறுவன தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்து உண்மையான தகவல்களை சிறீலங்கா அரசு வெளியிட வேண்டும் என ஐக்கிய நாடுகள்சபை கோரிக்கை விடுத்துள்ளது. தமது கோரிக்கையை சிறீலங்கா அரசு நிறைவேற்ற தவறும் பட்சத்தில் சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் அணைத்தையும் ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனங்கள் நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது.





