மலேசிய தமிழர் பேராளர் குழு கலைஞரை விரைவில் சந்திக்கும். இலங்கையில் அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படவதைத் தடுத்துநிறுத்தக் கோரி தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியை மலேசிய தமிழர் பேராளர் குழு மிக விரைவில் சந்திக்க இருக்கிறது. ஓவ்வொரு நாளும் இலங்கையில் தமிழர்களை சிறீலங்கா இராணுவம் படுகொலை செய்கின்றது. இந்த அராஐகத்தினால் தமிழினமே அழிந்து கொண்டிருக்கிறது. உலகிலுள்ள 8 கோடி தமிழர்கள் இந்தப் படுகொலையைக் கண்டித்தாலும் அதைத் தடுத்துநிறுத்த முடியவில்லை. மலேசிய தமிழர் பேராளர் குழு மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் குலசேகரன் தலைமையில் செல்லவுள்ளது. அக்குழுவில் ஐனநாயக செயல் கட்சி உலகத் தமிழர் நிவாரண நிதி மலேசிய இந்திய இளைஞர் மன்றம் மலேசிய தமிழ்க்கல்வி அறவாறியம் உலகத் தமிழர் மாமன்றம் மலேசிய திராவிடர் கழகம் மலேசிய தமிழ்நெறிக்கழகம் மலேசிய தமிழ் பாதுகாப்பு இயக்கம் உட்பட பல இயக்கத் தலைவர்கள் குழுவில் இடம் பெறுவர்.





