Tuesday, August 29, 2006

யாழ் கன்னாதிட்டியில் பொதுமகன் சுட்டுக்கொலை. யாழ்ப்பாணம் கன்னாதிட்டிப் பகுதியில் பொதுமகன் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவர் 31 அகவையுடைய ஜேசுதாஸ் டேமியன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.இன்று முற்பகல் 11.30 மணியளவில் தனியார் கல்வி நிலையத்திற்கு முன்பாக நின்று கொண்டிருந்த வேளை தாக்குதலாளிகளால் இவர் சுடப்பட்டுள்ளார்.