யாழ்.குடா நாட்டில் தொடரும் ஊரடங்கு சட்டத்தால் இயல்பு நிலை பாதிப்பு -செஞ்சிலுவை சங்கம், அரச படைகளுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்களினால் இலங்கையின் வடக்கில் ஆயிரக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்திருப்பது மிக மோசமான மனிதநேயப் பிரச்சினைகளை ஏற் படுத்துமென்று செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு நேற்று எச்சரித்திருக்கிறது. தொடரும் மோதல்களின் பின்னணியில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து அமுல்படுத்தப்படுமானால் யாழ்ப்பாணக் குடாநாட்டில் இயல்புநிலை வெகுவாகப் பாதிக்கப்படலாமென்றும் செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு சுட்டிக்காட்டியுள்ளது. இந்தியாவின் ஐ.ஏ.என்.எஸ் செய்தி நிறு வனத்திற்கு பேட்டியளித்திருக்கும் செஞ்சிலுவைச் சர்வதேச குழுவின் பேச்சாளர் டேவிட் விக்னாட்டி, யாழ்ப்பாணக் குடாநாட்டில் இதுவரை சுமார் 25 ஆயிரம் குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன என்று கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது:– யாழ்ப்பாணக் குடாநாட்டில் தொலைத் தொடர்பு பாதிக்கப்பட்டுள்ளதால் அங்குள்ள மக்கள் வெளியிடங்களில் உள்ள தமது உறவினர்களுடன் தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறான தொடர்பு களை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக செஞ்சிலுவை சர்வதேசக் குழு செயற்பட்டுவருகிறது. ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து அமுலாக் கப்படுமானால் குடாநாட்டின் நிலைமை மோசமடையும். குடாநாட்டில் மருத்துவப் பிரச்சினைகள் இப்போதைக்கு இல்லையாயினும் கூட உணவு, சுத்தமான குடிதண்ணீர் போஷாக்குப் பிரச்சினைகள் ஏற்படும் சாத்தியம் உள்ளன. இவ்வாறு கூறினார் செஞ்சிலுவைக் குழுவின் பேச்சாளர்.
Tuesday, August 29, 2006
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.