விமானத் தாக்குதல்களை பாகிஸ்தான் படையினர் நடத்துவதாக கூறுவதை இராணுவம் நிராகரிப்பு. விடுதலைப் புலிகளுக்கு எதிரான விமானத் தாக்குதல்களை பாகிஸ்தானின் விமானப் படையே வழி நடத்துகின்றது எனத் தெரிவிக்கப்படுவதை இலங்கை இராணுவம் நிராகரித்துள்ளது. கொழும்பிலிருந்து செயற்பட்டு வரும் பாகிஸ்தானிய அதிகாரிகளே இதனை வழி நடத்துகின்றனர் எனத் தெரிவிக்கப்படுவதில் எவ்வித உண்மையுமில்லையென மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், பாகிஸ்தானிடமிருந்து சட்டபூர்வமாக உதவிகளை இலங்கை இராணுவம் பெறுவதை இலங்கை இராணுவ அதிகாரிகள் ஏற்றுக் கொண்டுள்ளனர். எமது உறவுகளில் இரகசியம் எதுவுமில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இலங்கை இராணுவத்திற்கான இந்தியாவின் உதவிகள் அதிகரிப்பது ராமனுக்குத் தெரிந்திருக்காது. பல மாதங்களுக்கு முன்னர் இந்தியா யுத்தக் கப்பலொன்றை இலங்கைக்கு வழங்கியது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இராணுவ ஒத்துழைப்பிற்கு இதுவொரு உதாரணம் எனவும் குறிப்பாக இந்திய கடற்படைக்கான ஆதரவு அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வெளிநாட்டு புலனாய்வு அமைப்பின் முன்னாள் அதிகாரியான பி.ராமன் இலங்கையில் பாகிஸ்தானின் செல்வாக்கு அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
Monday, August 28, 2006
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.