வவுனியாவில் 16 தமிழ் இளைஞர்கள் ஸ்ரீலங்கா படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
வவுனியா பூவரசங் குளத்தில் உள்ள இராணுவ முன்னரங்க நிலைகைளை தாக்கியவாறு உள்நுழைந்த 16 தமிழீழ விடுதலைப்புலிகளின் போராளிகளை தாம் சுட்டுக்கொன்றிருப்பதாக சிறீலங்கா இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இன்று காலை சிறிய ரக ஆயுதங்களுடன் தாக்குதல்களை நடத்தியவாறு தமது முன்னரங்க நிலைகளுக்குள் பிரவேசித்த 16 பேரையும் தாம் சுட்டுக்கொன்றுள்ளதாகவும் இவர்களிடமிருந்த ஆயுதங்களையும் தாம் கைப்பற்றியுள்ளதாகவும் சீறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை வவுனியாவிலிருந்து கிடைக்கும் சுயாதீன தகவல்களின் படி சுட்டுக்கொல்லப்பட்ட 16 இளைஞர்களும் சுமார் 20 -25 வயதிற்குட்பட்டவர்கள் என்றும்; இவர்கள் விடுதலைப்புலிகள் என்று அடையாளப்படுத்தக்கூடிய எந்தவொரு அடையாளமும் இல்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. இவ்ர்களது சடலங்கள் தற்சமயம் வவுனியா பொது மருத்துவ மனையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன. இதனிடையே மருத்துவ மனைக்கு விஜயம் மேற்கொண்ட வவுனியா மாவட்ட நீதிபதி இரா இளஞ்செழியன் சடலங்களை சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்குமாறு கேட்டுள்ளர்.
Tuesday, August 29, 2006
Tuesday, August 29, 2006
No comments
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.